தாய் இந்தப்பக்கம், மகள் அந்தப்பக்கம்.. செத்தும் பல குடும்பங்களை பாடையில் ஏற்றும் டிக் டாக்.. நெஞ்சை உலுக்கும் அடுத்த அதிர்ச்சி.!!
Tiruppur man suicide due to life Failure
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒர்க்ஸ் ஷாப் உரிமையாளர் ரவி. இவரது மனைவி கனகவல்லி. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 19 வருடங்களாகும் நிலையில், 17 வயது ஒரு மகளும், 15 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். ரவியின் வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்த நிலையில், கனகவல்லி அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் டிக் டாக் செயலிக்கு அடிமையான நிலையில், மோசக்கார டிக் டாக் மூலமாக ஈரோட்டை நபருடன் பழகி வந்துள்ளார். இரவு பகல் பாராமல் கனகவல்லி டிக் டாக் காதலனுடன் உரையாடி வந்த நிலையில், 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த மகளும், டிக் டாக் செயலிக்கு அடிமையாகி இருந்தார். அவரும் ஈரோட்டை சேர்ந்த டிப்ளமோ படிக்கும் மாணவன் ஒருவனை காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து தாயும், மகளும் ஒரே அறையில் தங்களின் காதலர்களோடு அலைபேசியில் பேசி வந்த நிலையில், இந்த விஷயம் ரவியின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது. இதனால் இருவரையும் கண்டித்த நிலையில், இருவருமே ரவியின் மீது வெறுப்பை ஏற்படுத்தி, சில மாதங்களுக்கு முன்னதாக தங்களின் காதலர்களோடு தலைமறைவாகி உள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இது குறித்த புகாரை ஏற்று காவல்துறையினர் கனகவல்லி மற்றும் அவரது மகளையும் ஈரோட்டில் கண்டுபிடித்து, இருவருக்கும் அறிவுரை கூறி ரவியிடம் ஒப்படைத்துள்ளனர். இதன் பின்னரும் தாயும், மகளும் திருந்தாத நிலையில், இருவரும் அவர்களின் காதலர்களை தேடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து காவல் நிலையத்திற்கு செல்ல அவமானப்பட்ட ரவி, மனைவியை அழைத்து சமாதானம் பேசிய நிலையில், கனகவல்லி அவதூறாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்து போன ரவி, வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, தனது மகனை மட்டும் நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு கண்ணீருடன் வீடியோ பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கலி முற்றிவிட்டதன் அடையாளமாக பல துயரங்கள் நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruppur man suicide due to life Failure