திருப்பூர் | அலுவலகத்துக்குள் புகுந்து பெண் அரசு வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் : அலுவலகத்துக்குள் புகுந்து பெண் அரசு வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட இரு மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருப்பவர் ஜமீலாபானு (வயது 50). சம்பவம் நடந்த இன்று (செப்., 18) மதியம் குமரன் சாலையில் உள்ள அலுவலகத்துக்கு, தனது மகளுடன் ஜமீலாபானு வந்துள்ளார். தனது

அப்போது, அலுவலகத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்த இரு மர்ம நபர்கள், திடீரென ஜமீலாபானுவையும், அவரின் மகளையும்  அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

என்ன நடக்கிறது என்று புரியாமல் தாயும், மகளும் மரண வழியில் அலற, சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். அப்போது மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதனையடுத்து ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, ரத்த காயங்களுடன் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, சம்பவ இடத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாளை போலீஸார் கைப்பற்றி மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Lady Advocate attempt murder case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->