கள்ளக்காதலி சால்பாக் மாத்திரை கொடுத்து கொலை செய்யப்பட்ட விவகாரம்... கைதான கொடூரன்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தூர் கொடுமுடி பகுதியை சார்ந்தவர் யுவராஜ் (வயது 37). இவரது மனைவி சங்கீதா (வயது 33). இவர் பியூட்டி பார்லர் நடத்தி வரும் வருகிறார். இதே பகுதியை சார்ந்த விவேக் (வயது 28) என்ற வாலிபர் பைனான்ஸ் தொழில் செய்து வரும் நிலையில், விவேக்கிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 

விவேக்கிடம் சங்கீதா தனது பியூட்டி பார்லரை விரிவாக்க பணம் வாங்கியுள்ள நிலையில், இவர்களிடம் ஏற்பட்ட பழக்கம் நட்பாக தொடர்ந்த நிலையில், அடிக்கடி சங்கீதாவின் பியூட்டி பார்லருக்கு பணம் வாங்க சென்றுள்ளார். இதனையடுத்து இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

இந்த சமயத்தில், விவேக் சங்கீதாவை திருமணம் செய்ய ஆசைப்பட்டு, தனது விருப்பத்தை சங்கீதாவிடம் தெரிவித்த நிலையில், இதற்கு சங்கீதா சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், கடந்த மே 9 ஆம் தேதியன்று சங்கீதாவின் இல்லத்திற்கு என்ற விவேக், சங்கீதாவின் கணவரை தாக்கி, சால்பாக் மாத்திரையை சங்கீதாவின் வாயில் திணித்துள்ளான். விவேக்கும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளான். 

சங்கீதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில், விவேக் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்நிலையில், தற்போது விவேக்கிற்கு சிகிச்சை முடிந்ததை அடுத்து, நேற்று வெள்ளகோவில் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இது குறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur illegal affair murder police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->