மனைவி கத்தியால் குத்தப்பட்டதை எண்ணி வருத்தமடைந்த கணவனின் விபரீதத்தால் அரங்கேறிய சோகம்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் மாதப்பூர் மாரியம்மன் கோவில் வீதியை சார்ந்தவர் கெளரி சங்கர் (வயது 36). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது மனைவி பானுபிரியா (வயது 30). இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் - மனைவிக்கு இடையே கடந்த சில மாதமாக குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. 

இதனையடுத்து தம்பதிகளை அவர்களின் பெற்றோர்கள் அமைதிப்படுத்திய நிலையில், கடந்த 13 ஆம் தேதி இவர்களுக்குள் மீண்டும் தகராறு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கவுரி சங்கர், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் வயிறு மற்றும் கழுத்து பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். 

வலிதாங்க இயலாத பானுபிரியாவின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் வந்த போது விபரீதம் புரிந்துள்ளது. இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பானு பிரியாவை, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். இந்நிலையில், மனைவியை கத்தியால் குத்தியதில் மனமுடைந்த கவுரி சங்கர் பல்லடம் காவல் நிலையத்திற்கு சரணடைய சென்ற நிலையில், அவரின் வாயில் பூச்சிமருந்து வாசம் அடித்துள்ளது. 

இதனையடுத்து சோதனை செய்த அதிகாரிகள், அவர் பூச்சி மருந்தை குடித்துள்ளதை உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதி செய்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Husband Suicide due to Feeling of Wife Murder Attempt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->