தாய், மகன், மகள் தூக்கிட்டு தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி பின்னணி.. திருப்பூரில் சோகம்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முதலிபாளையம் சிட்கோ மகாலட்சுமி நகர் பகுதியை சார்ந்தவர் ராகவன் (வயது 50). இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி (வயது 47). இவர்கள் இருவருக்கும் அஸ்வின் என்ற 19 வயது மகனும், அகல்யா என்ற 17 வயது மகளும் உள்ளனர். 

கடந்த 15 வருடத்திற்கு முன்னதாக குடும்பத்தினர் 4 பேரும் மோட்டார் சைக்கிளில் செல்கையில் ஏற்பட்ட விபத்தில் ராகவன் அதிஷ்டவசமாக எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். ஆனால், செல்வி மற்றும் அகல்யாவின் கை துண்டாகியது. அஸ்வினுக்கு கால்கள் துண்டாகின. இவர்கள் அனைவரையும் ராகவன் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக ராகவன் உடல்நலக்குறைவால் உயிரிழக்கவே, செல்வி, அஸ்வின் மற்றும் அகல்யா பராமரிக்க ஆட்கள் இல்லாமல் அவதியுற்று வந்துள்ளனர். ஊட்டியில் இருந்த செல்வியின் தங்கை மகாலட்சுமி, அவ்வப்போது திருப்பூருக்கு வந்து தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். 

இருந்தாலும், 3 பேரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். நேற்று திடீரென செல்வி மகாலட்சுமிக்கு தொடர்பு கொண்ட நிலையில், " எங்களால் இனி வாழ இயலாது. நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம் " என்று கூறிவிட்டு போனை துண்டித்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி திருப்பூருக்கு விரைந்து சென்றுள்ளார். 

வீட்டில் சென்று பார்க்கையில் செல்வி, அஸ்வின் மற்றும் அகல்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு பிணமாக தொங்கியுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி ஊத்துக்குளி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மூவரின் உடலையும் கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Family Members Suicide 10 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->