வீடு வீடாக களமிறங்கிய சுகாதாரத்துறை.. கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி..!
Tiruppur District Administration Implement Corona test Tiruppur Municipal Areas 8 April 2021
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றானது மீண்டும் வேகமெடுத்து பரவ தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு 50 க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 100-யை தாண்டி கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது.
மேலும், நேற்று ஒரேநாளில் திருப்பூர் மாவட்டத்தில் 141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியனது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 735 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், திருப்பூர் மாநகர் பகுதிகளில் தினமும் 200 முதல் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 800 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுமட்டுமல்லாது வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் நபர்கள், கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். திருப்பூர் மாநகரின் சில பகுதிகளில் பொதுமக்களுக்கு இரத்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு, நோயெதிர்ப்பு சக்தி இருக்கிறதா? எனவும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tiruppur District Administration Implement Corona test Tiruppur Municipal Areas 8 April 2021