ஆசையாக பிள்ளைகளுக்கு பாஸ்ட் புட் கொடுத்த தந்தை.. காலையில் அடுத்தடுத்து அதிர்ச்சி.. பெற்றோர்களே கவனம்.!
Tiruppur Children Death Eating of Fast Food Late Night Police Investigation
இரவு நேரத்தில் துரித உணவுகளை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள், அடுத்தடுத்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். அவரது மனைவி ஆர்த்தி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருப்பூரில் உள்ள தண்ணீர் பந்தல் அருகே வசித்து வந்தனர்.
தனியார் துரித உணவகத்தில் சந்தோஷ் ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை சமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இரவு பணி முடிந்ததும் வீட்டிற்கு தாமதமாக வரும் சந்தோஷ், தன் குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் பிரைஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்த சந்தோஷ், தான் எடுத்து வைத்திருந்த பிரைடு ரைஸை தன் மூத்த மகன் பிரையன் மற்றும் மகள் பிரியங்காவுக்கு கொடுத்துள்ளார். இரவு நேரத்தில் உறக்க கலக்கத்தில் உணவைச் சாப்பிட்ட குழந்தைகள், படுத்து உறங்கிய நிலையில் காலையில் பிரையன் உறக்கத்திலிருந்து எழாமல் அசைவின்றி கிடந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சந்தோஷ், குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்லவே, பிரையனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மகனின் உடலை வீட்டுக்கு சோகத்துடன் கொண்டு வந்த நிலையில், குழந்தை பிரியங்கா அடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை மருத்துமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரவு நேரத்தில் கொடுக்கப்பட்ட ஃபாஸ்ட் ஃபுட் உணவு பாய்சனாக மாறி இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கும் நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் குழந்தைகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruppur Children Death Eating of Fast Food Late Night Police Investigation