காதல் ஜோடியை கண்ட சிறுவன் கொலை.. வயது நிரம்பாத ஜோடியின் கொடூரம்.. கண்ணீரில் பெற்றோர்கள்.!!
Tiruppur child murder police investigation and arrest love couple
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்குளி சொட்ட கவுண்டன்பாளையம் பகுதியைச் சார்ந்த பனியன் நிறுவன தொழிலாளர் தங்கராஜ். இவரது மனைவியின் பெயர் சுமதி. இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் இளைய மகன் பவனேஷ் (வயது 8).
தங்கராஜ் மற்றும் சுமதி இருவரும் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால், காலையில் பணிக்கு சென்று மாலையில் வீடு திரும்புவார்கள். இந்நிலையில், நேற்று காலையில் வழக்கம்போல சென்று விட்ட நிலையில், இரண்டு மகன்களும் அங்குள்ள குளத்துக்கு அருகில் இருக்கும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
மதியம் வரை விளையாடிய சிறுவர்கள் அவரவர் வீட்டிற்கு சென்ற நிலையில், சிறுவன் புவனேஷ் மட்டும் மாயமாகியுள்ளான். மாலை நேரத்தில் வேலை முடித்து வீட்டிற்கு வந்த தங்கராஜ் மற்றும் சுமதி, மகனை அங்குள்ள பகுதியில் தேடியும் காணாததால், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்த புகாரை ஏற்ற காவல்துறையினர், இரவு முழுவதும் சிறுவனைத் தேடி வந்த நிலையில், இன்று காலை அங்குள்ள பல்லகவுண்டன்பாளையம் குளத்திற்கு அருகில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளான். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்த நிலையில், தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த விஷயம் குறித்து தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், மாயமான சிறுவனை அப்பகுதியை சார்ந்த சிறுமி தனியே அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காதல் ஜோடியை பிடித்து விசாரிக்கையில், சிறுவனின் கொலைக்கான மர்மம் வெளியே வந்துள்ளது.
சம்பவத்தன்று, குளத்திற்கு அருகில் சிறுவன் விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், சிறுமி தனது காதலருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனை சிறுவன் எதிர்பாராத விதமாக கண்டுகொள்ளவே, சிறுவன் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த காரணத்தால், இதனை வெளியே கூறிவிடலாம் என்று எண்ணி பயந்த சிறுமி மற்றும் அவளது காதலனால் இக்கொலை அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruppur child murder police investigation and arrest love couple