ஆம்னி காருடன் உயிரோடு தீயில் கருகி உயிரிழந்த நோயாளி.. திருப்பூரில் பெரும் சோகம்.! - Seithipunal
Seithipunal


ஆம்னி கார் தீப்பற்றி எரிந்ததில், மருத்துவமனையில் இருந்து அழைத்து வரப்பட்ட நோயாளி உடல் கருகி உயிரிழந்த பரிதாபம் அரங்கேறியுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள துடுப்பதி பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜன். இவரது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக, கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

கால் எலும்பு முறிவு பிரச்சனை ஒரளவு சரியான நிலையில், நேற்று அவரது மனைவி மற்றும் உறவினர் ராஜா என்பவருடன் மருத்துவமனையிலிருந்து ஆம்னி காரில் ரங்கராஜனை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். 

இவர்களின் வாகனம் பெருமாநல்லூர் அருகே வரும் போது, காரை நிறுத்திவிட்டு ராஜா மற்றும் கார் ஓட்டுனர் இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளனர். பின்னர் வந்து காரினை இயக்குகையில், கார் திடீரென தீப்பிடித்து இருந்துள்ளது. 

பதறிப்போன ராஜா, கார் ஓட்டுநர், ரங்கராஜனின் மனைவி காரில் இருந்து வெளியேறிய நிலையில், கால் முறிவுடன் காரில் படுத்திருந்த ரங்கராஜனை மீட்க முடியவில்லை. இதனால் அவர் காருடன் சேர்ந்து தீயில் எரிந்து பலியாகினார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர், இது குறித்து ராஜா மற்றும் கார் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை சந்தேக மரணம் என்றும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Car Fire Accident Patient Died when going to Home From Hospital 9 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->