மகன் வயது முதலாளியுடன் நெருக்கம்.. வேலைக்கு சென்ற இடத்தில் கள்ளக்காதல்.. ஜோடியாக தற்கொலை.!
Tiruppur Affair Couple Suicide at Erode Gobichettipalayam
ஆத்துப்பாளையம் பகுதியை சார்ந்த கள்ளக்காதல் ஜோடி, கோபிசெட்டிபாளையம் அருகே தற்கொலை செய்துகொண்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பாளையம் பகுதியை சார்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி தங்கமணி (வயது 36). தம்பதிகள் இருவருக்கும் 22 வயதுடைய பிரபாகரன் என்ற மகனும், செல்வி என்ற 14 வைத்து மகளும் உள்ளனர்.
வேலம்பாளையம் பகுதியை சார்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் அஸ்வின் (வயது 21) நடத்தி வரும் கார்மண்ட்ஸ் நிறுவனத்தில் தங்கமணி பணியாற்றி வந்துள்ளார். இதன்போது, தங்கமணிக்கும் - அஸ்வினுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் தங்கமணியின் குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மகன் வயதுடைய வாலிபருடன் கள்ளக்காதல் பழக்கம் குறித்து குடுமப்த்தினர் கண்டித்து இருக்கின்றனர்.
அஸ்வினின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அஸ்வினின் குடும்பத்தினரும் அவரை கண்டித்து இருக்கின்றனர். இதனால் மனமுடைந்து போன கள்ளக்காதல் ஜோடி, தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவெடுத்துள்ளது.
இதனால் வீட்டில் இருந்து வெளியேறிய கள்ளக்காதல் ஜோடி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் மேவாணி பகுதிக்கு சென்றுள்ளது. பின்னர், அங்கிருந்த கிணற்றுக்கு அருகே அமர்ந்து விஷம் குடித்து, கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளது.
இந்நிலையில், இன்று கிணற்றுக்குள் பிணம் மிதப்பதை கண்ட உள்ளூர் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர், கள்ளக்காதல் ஜோடியின் சடலத்தை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், மேற்கூறிய கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக இருதரப்பு குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tiruppur Affair Couple Suicide at Erode Gobichettipalayam