ஏலகிரி: ஐயா எங்களை காப்பாற்றுங்கள்... காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்.!
Tirupattur Yelagiri Love Couple in Police Station want Protection 16 Feb 2021
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில் அமைந்துள்ள கணியூர் பகுதியை சார்ந்தவர் கோவிந்தசாமி (வயது 21). இவர் பொக்லைன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, கோவிந்தசாமியும் - சிறுமியும் ஜூலை மாதம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக பெண்ணின் பெற்றோர் ஏலகிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து காவல் துறையினர் தங்களை தேடும் செய்தியை காதல் ஜோடி அறிந்துள்ளது.
இந்நிலையில், காதல் ஜோடி ஏலகிரி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து, இளம்பெண் 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. தம்பதிகளிடம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tirupattur Yelagiri Love Couple in Police Station want Protection 16 Feb 2021