சரக்கடிக்க பணம் கேட்டு தகராறு.. மண்டையை உடைத்த மனைவி.!!
Tirupattur wife attack husband
மதுபோதையில் சண்டையிட்ட கணவனின் மண்டையை புலந்தது தொடர்பான சம்பவம் தெரியவந்துள்ளது.
திருப்பத்தூர் நகர்ப்புற பகுதியை சார்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவியின் பெயர் ராஜேஸ்வரி. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து வாழ்ந்து வரும் நிலையில், வெங்கடேஷிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.
இதனால் தினமும் பணிக்கு சென்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் பழக்கத்தை வைத்திருந்த நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சரியான வருமானம் இல்லை. இதனால் மது அருந்த இயலாமல் வெங்கடேஷ் தத்தளித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது மனைவி ராஜேஸ்வரியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் மனைவியிடம் சண்டையிட்ட நிலையில், ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி கணவரின் தலையில் கல்லைத்தூக்கி போட்டுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த வெங்கடேஷை மீட்ட அக்கம் பக்கத்தினர், அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் வெங்கடேஷ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே குடிபோதையில் சண்டை போட்ட கணவனைக் கொல்ல மனைவி முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குடிப்பதற்காக கணவர் வெங்கடேஷ் பணம் கேட்டு மனைவி ராஜேஸ்வரியிடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். அத்திரம் அடைந்த ராஜேஸ்வரி தூங்கிக்கொண்டிருந்த கணவன் தலையில் கல்லைப்போட்டு கொல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த கணவர் வெங்கடேஷ் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tirupattur wife attack husband