திருமணம் செய்வதாக கூறி பலமுறை உல்லாசம்.. கம்பி நீட்டிய காதலனை, கம்பிக்குள் அடைத்த காதலி.!
Tirupattur Vaniyambadi Youngster Gokul Arrest by Police Cheating girl Name of Love and Abused Many Times
காதலியிடம் உல்லாசமாக இருந்து விட்டு அவரை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் இளைஞன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளன். அவனுக்கு உதவிய இளைஞனின் பெற்றோர் மற்றும் நண்பர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் பெத்தூர் கிராமத்தை சார்ந்த 23 வயது பெண் எஞ்சினியர், கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், ஜோலார்பேட்டை எஸ். கோடியூர் கிராமத்தை சார்ந்த கோகுல் (வயது 24) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் வாணியம்பாடி தனியார் எஞ்சினியரிங் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கோகுல் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஏமாற்றி, ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
திருமண ஆசையில் காதலன் என்றானாலும் கணவனாகிவிடுவான் என்ற எண்ணத்தில் பெண்ணும் அவனது ஆசைக்கு ஒத்துழைத்து வந்த நிலயில், கோகுல் தான் பயின்று வந்த கல்லூரியில் இருந்து மாற்று கல்லூரிக்கு சென்றும் காதல் பயணம் தொடர்ந்து வந்துள்ளது.
இந்நிலையில், கோகுலிடம் பெண்மணி தன்னை திருமணம் செய்துகொள்ள கூறி தெரிவிக்கவே, அதற்கு கோகுல் மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர், கோகுலின் வீட்டிற்கு சென்றே பெண்மணி நடந்ததை தெரிவித்துள்ளார். இதனைக்கேட்ட கோகுலின் தந்தை திருக்குமரன் (வயது 50) மற்றும் தாயார் செல்வி (வயது 50) ஆகியோர் கோகுலின் காதலியை விரட்டியுள்ளனர்.
மேலும், நீ எங்களின் வீட்டிற்கு வர கூடாது என்று மிரட்டி அனுப்பிய நிலையில், கோகுலின் நண்பர்கள் பூபாலன், அரவிந்தன், பாலா ஆகியோரும் சேர்ந்து தங்களது நண்பன் தவறு செய்திருக்கிறான் என்ற குற்ற உணர்ச்சி இல்லாது பெண்ணை மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்துபோன பெண்மணி திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரை பெற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். இந்த விசாரணையில் கோகுலின் மீதான குற்றச்சாட்டு உறுதியாகவே, அவனை கைது செய்துள்ளனர். மேலும், அவனது நண்பர்கள், தாய், தந்தையை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tirupattur Vaniyambadi Youngster Gokul Arrest by Police Cheating girl Name of Love and Abused Many Times