16 வயது சிறுமியை கடத்திச்சென்று கட்டாயத்தாலி கட்டிய காமுகன்.. போக்ஸோவில் கைது.!! - Seithipunal
Seithipunal


பள்ளி சிறுமியை கடத்தி சென்று கட்டாயத் திருமணம் செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை எடுத்திருக்கும் பொன்னேரி, குறும்பர் வட்டம் பகுதியை சார்ந்தவன் விஜய் (வயது 26). இவன் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறான். வாணியம்பாடி கனவாய்புதூர் பகுதியை சார்ந்த சிறுமி, 10 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

இந்நிலையில், காமுகன் விஜய் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, கடந்த 21 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தி சென்றுள்ளான். பின்னர், அவரை கட்டாய திருமணம் செய்துள்ளான். 

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில், இந்த விஷயம் தொடர்பாக புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், விஜயை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur Vaniyambadi Lorry Driver Vijay Arrested by Police Under Pocso Act Aged 16 Child Girl Forced Marriage Case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->