பள்ளி மாணவி கற்பழிப்பு, ஆசிரியையுடன் கள்ளக்காதல்.. காமுகன் முகம் சிதைக்கப்பட்டு கொலை.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றாம்பள்ளி பங்களாமேடு பகுதியில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தில், தலை நசுங்கிய நிலையில் ஆணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாந்தூர் கங்காவரம் பகுதியை சேர்ந்த ஆசிரியர் சிவக்குமார் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பதும், ஊத்தங்கரை ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. 

சிவகுமாருடன் பணியாற்றி வந்த ஆசிரியை ஒருவரின் கணவரை கைது செய்து விசாரணை செய்கையில், இந்த கொலைக்கான மர்மம் விலகியுள்ளது. பள்ளிக்கூடத்தில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்த சிவகுமாருக்கு, அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வந்த லட்சுமி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு, இருவரும் தனிமையில் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்த விஷயத்தை அறிந்த லட்சுமியின் காதல் கணவர் இளங்கோ, சிவகுமாரை சந்தித்து நாங்கள் ஏற்கனவே காதல் செய்து சாதி மறுப்பு திருமணம் செய்துள்ள இருக்கிறோம் என்றும், எங்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். இருந்தாலும், இவர்கள் இருவரும் கள்ளக்காதலை கைவிடுவதாக தெரியவில்லை. இதையடுத்து ஆத்திரமடைந்த இளங்கோ கூலிப்படை மூலமாக கணித ஆசிரியர் சிவகுமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். 

இதற்காக ஊத்தங்கரை இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் வசித்து வரும் பிரபல ரவுடியான வெள்ளைச்சாமி என்பவரை சந்தித்து பணம் கொடுத்து, இந்த கொலையை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது. சிவகுமாரை வாடகை காரில் கடத்திச் சென்ற கும்பல், அவரை சரமாரியாக அடித்து நொறுக்கி கிருஷ்ணகிரி வரை சென்று, பின்னர் நாட்றாம்பள்ளி பங்களாமேடு அருகே உள்ள பகுதியில் உடலை தூக்கி வீசி, காரின் டயரை வைத்து சிவகுமாரின் தலையை நசுக்கி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக ஆசிரியையின் கணவர் இளங்கோ, ரவுடி வெள்ளைச்சாமி உள்ளிட்ட 8 பேர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், சிவகுமார் லட்சுமி மட்டுமல்லாது, இது போன்ற ஐந்து பெண்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததும், கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னதாக எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரை கர்ப்பமாக்கிய நிலையில், பெண்ணின் பெற்றோரை மிரட்டி அதிகம் பணம் கொடுத்து கர்ப்பத்தை கலைக்க வைத்து, விஷயம் காவல்நிலையத்திற்கு செல்லாமல் பார்த்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது. 

நீ செய்த வினையெல்லாம், உன்னை அறுக்க காத்திருக்கும்.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur Teacher Sivakumar Murder Police Discovered Mystery 2 Feb 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->