சாராய வியாபாரிக்கு சால்வை போட்டு, கேக் ஊட்டிய காவல்துறை அதிகாரி..!! - Seithipunal
Seithipunal


சாராய வியாபாரியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட உதவி ஆய்வாளர், அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் உமாபாரத் காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் காவல் அதிகாரி விஸ்வநாதன். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக அங்குள்ள மிட்டாளம் சாராய வியாபாரி அஜித் என்பவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். 

இந்த பிறந்தநாளில் கலந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன், சாராய வியாபாரிக்கு சால்வை அணிவித்து நட்பு பாராட்டியுள்ளார். மேலும், கேக்கும் ஊட்டிவிட்டு பிறந்தநாளை சிறப்பித்த நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் வெளியானது. 

இதனால் பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், இந்த விஷயம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவரது உத்தரவின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur Police SI visit Liquor Sales culprit and Celebrate Birthday


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->