முதுமை தள்ளும் வயதில் ஆத்திரம்.. கொழுந்துவிட்டு எரிந்த மனைவி.. துடிதுடிக்க அரங்கேறிய சோகம்.!!
Tirupattur Murder police arrest husband
தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரனார் தெரு பகுதியை சார்ந்தவர் சேஷாசலம் (வயது 65). இவர் நகைக்கடையில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மல்லிகா (வயது 60). இவர்கள் இருவருக்கும் மகன் மற்றும் 2 மகள்கள் உள்ள நிலையில், மகள்கள் இருவரும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் மகன் தரைத்தளத்தில், சேஷாசலம் - மல்லிகா மாடியிலும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சேஷாசலம் வெண்ணிற தழும்பால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இவரை சரிவர மனைவி கவனிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினத்தன்று வழக்கம்போல வீட்டின் மொட்டை மாடியில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கவே, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சேஷாசலம் மனைவியின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதனால் மல்லிகாவின் உடல் முழுவதும் தீப்பற்றி எறிந்த நிலையில், அவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ந்த அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் உடல் கருகி பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேஷாசலம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tirupattur Murder police arrest husband