திருமணத்திற்கு காத்திருக்க முடியாமல், ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய மணமகன்.!! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சார்ந்தவர் குமார். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 29). இவர் கம்பிக்கட்டும் தொழிலை செய்து வந்துள்ளார். இவருக்கும், வாணியம்பாடி கோணாமேடு பகுதியை சார்ந்தவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்துள்ளது. 

இந்நிலையில், பெண் வீட்டார் தரப்பில் திருமணத்தை பொங்கல் பண்டிகை முடிந்ததும், அடுத்த வருடம் நடத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளான கிருஷ்ணமூர்த்தி, யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். 

நேற்று திடீரென வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது உடலை கண்ட பெற்றோர் கதறியழுவதை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், விரைந்து சென்று பார்க்கையில் விஷயம் புரியவந்துள்ளது. 

இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur man suicide attempt police investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->