மகனுக்கு நீச்சல் சொல்லிக்கொடுக்க சென்று, தந்தையும் மகனும் பலியான பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


தந்தையும் மகனும் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு 8 வயதுடைய ஜெகதீஸ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில், தனது மகன் ஜெகதீ ஷுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக பிளாஸ்டிக் டப்பாவையும், மகனையும் ஒன்றாக கட்டி கிணற்றில் தந்தை இறங்கியுள்ளார். 

இந்நிலையில், பிளாஸ்டிக் டப்பாவின் மேல் கட்டப்பட்டிருந்த கயிறு திடீரென அறுந்து, அவரது மகன் ஜெகதீஷ் நீரில் தத்தளிக்கவே, மகனை காப்பாற்ற பாலாஜியும் கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதில், பாலாஜி சேற்றில் சிக்கிக்கொண்டு அவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இதனால் இருவரின் சடலமும் நீரில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் இருவரின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திருப்பத்தூர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur Father and Son Death in Well 7 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->