குடும்ப சண்டையில் ஆத்திரம்... மனைவியை சரமாரியாக வெட்டித்தள்ளிய கணவன்.! - Seithipunal
Seithipunal


மனைவியை சரமாரியாக வெட்டிய நபர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாதனூர் பகுதியை சார்ந்தவர் தினேஷ். இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

தம்பதிகளுக்குள் அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வருவது வழக்கமான விஷயமாகியுள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்றும் வழக்கம் போல தம்பதிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த தினேஷ் மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். 

படுகாயத்துடன் பெண்மணி உயிருக்கு அலறவே, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். பின்னர் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இதற்குள்ளாகவே மனைவியை குடும்ப சண்டையில் ஆத்திரத்தில் வெட்டிவிட்டதாக கூறி, தினேஷ் மாதனூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மஞ்சுளா அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur Family fight wife murder attempt by Husband Police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->