சிமிண்ட் லாரி மோதி பள்ளி மாணவி பலி.. மாணவியின் ஆசையே அவரின் உயிரை பறித்த சோகம்.!
Tirupattur Child girl Atchaya Died an Cement Load Lorry Accident
இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிர் இழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சு.பள்ளிப்பட்டு மின் நகர் பகுதியைச் சார்ந்தவர் தண்டபாணி. இவர் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மகள் அட்சயா. அட்சயா அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில், இரு சக்கர வாகனம் மீது அலாதி பிரியம் கொண்ட அட்சயா, தனது தந்தையின் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். சம்பவத்தன்று, அட்சயா கடைக்கு செல்வதற்காக நேற்று பிற்பகல் வீட்டிலிருந்து தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
இதன் போது, சாலையின் எதிர்ப்புறத்தில் சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி, எதிர்பாராதவிதமாக அட்சியா வந்த வாகனத்தின் மீது மோதியது. இதில், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்த அட்சயா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், லாரி ஓட்டுநர் சுதாகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tirupattur Child girl Atchaya Died an Cement Load Lorry Accident