அத்துமீறிய புள்ளிங்கோ.. அல்லையில் போட்டு மிதித்தெடுத்த மாணவர்கள்.. சில்மிஷம் செய்ததால் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


ஆம்பூர் பள்ளிகொண்டா பகுதியில், அரசு பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட புள்ளிங்கோக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பள்ளிகொண்டா பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதல் வருடம் பயின்று வந்த 3 மாணவிகள், கல்லூரி முடிந்ததும் ஆம்பூர் திரும்புவதற்காக அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளனர். 

இதன்போது, பேருந்தின் இருக்கையில் அமர்ந்து வந்த மாணவிகள் உறங்கிக்கொண்டு வந்ததாக தெரியவருகிறது. இதனைகவனித்துக்கொண்டு இருந்த புள்ளிங்கோ ஒருவன், தனது கைவரிசையை காட்டியுள்ளனன். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் அலறவே, அக்கம் பக்கத்தில் நின்ற மாணவர்கள் ஒன்றுகூடி அவனை பேருந்துகள் வைத்து நையப்புடைத்துள்ளனர்.

பின்னர் பேருந்து நிலையம் வந்ததும், அவனது சட்டையை பிடித்து இழுத்து நடுரோட்டில் அடித்தபடியே வந்த மாணவர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து அவ்வழியாக வந்த ஆட்டோவில் காமுகனை ஏற்றிய காவல் துறையினர், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur Ambur Sexual Torture Pullingow Arrest by Police and Attacked by Students


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->