அனாவசியமாக திறந்திருந்த மளிகை கடை..! தலைமை காவலரின் அதிர்ச்சி செயல்.!!
Tirupattur Ambur Police Angry due to Shop open
ஆம்பூர் அருகேயுள்ள பகுதியில் ஊரடங்கை மீறி கடை செயல்பட்டு வந்ததன் காரணமாக, ஆத்திரமடைந்த காவல் அதிகாரி எடை இயந்திரத்தை தூக்கி வீசும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் வெங்கடேசமுத்திரம் ஊராட்சி பகுதியில் வசித்து வருபவர் ராஜா. இவருக்கு சொந்தமாக குளிர்பான கடை மற்றும் மளிகை கடை இருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், கடைகள் திறக்க நேரக்கட்டுப்பாடு அமலாகியுள்ளது. நேற்று மாலை நேரத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த தலைமை காவல் அதிகாரி ரகுராமன், வெங்கடேசமுத்திரம் பகுதிக்கு வந்துள்ளார்.
இந்த நேரத்தில், ராஜாவின் கடை திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் அதிகாரி, கடையில் இருந்த எடை இயந்திரத்தை தூக்கி வீசி எறிந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tirupattur Ambur Police Angry due to Shop open