திருநெல்வேலி வாலிபர் ஏமன் நாட்டில் கடத்தல்?.. கண்ணீரில் குடும்பத்தினர்.!! - Seithipunal
Seithipunal


பாளையங்கோட்டையை சார்ந்த வாலிபர், ஏமன் நாட்டில் கடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி, அவரது உறவினர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை மூளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி வேல்மதி. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

மாரியப்பன் கப்பலில் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த மாதம் மூன்றாம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஓமன் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். மாரியப்பனுடன் இந்திய நாட்டை சார்ந்த 14 பேரும், வங்காள நாட்டினை சார்ந்த 5 பேரும் சென்றுள்ளனர். 

இவர்களை ஏமன் நாட்டினை சார்ந்த நபர்கள் கடத்தி, ஜெனிவா தீவில் தங்க வைத்துள்ளனர் என்றும், எனது கணவரை அரசு எப்படியாவது மீட்டு தர வேண்டும் என்றும் கண்ணீருடன் வேல்மதி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Youngster Kidnapped in Yemen Country


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->