மதுபோதையில் பயணம்.. நண்பர்களின் விளையாட்டு 3 நட்பின் உயிரை காவுவாங்கிய சோகம்.! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் வாகனத்தை இயக்கியதில் 6 நண்பர்கள் பயணம் செய்த வாகனம் விபத்திற்குள்ளாகி, 3 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை அருகேயுள்ள மன்னார்புரம் பகுதியை சார்ந்தவர் பொன்சேகர் (வயது 40). ரெனிஸ் வாளன் (வயது 27), வில்சன் ரஜினி ராஜா (வயது 35), அதிர்ஷ்ட பாலன், செல்வம், ஸ்டீபன்.

இவர்கள் அனைவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், நேற்று மாலையில் காரில் திசையன்விளை அருகேயுள்ள பெட்டைக்குளம் கிராமத்திற்கு சென்றுள்ளனர். இதன்பின், அங்கிருந்து காரில் புறப்பட்டு தங்களது ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். 

இதன்போது, காரினை ஸ்டீபன் இயக்கிய நிலையில், மன்னார்புரம் சந்திப்பு பகுதியில் செல்கையில் எதிர்பாராத விதமாக வாகன ஓட்டியின் கட்டுப்பாட்டினை இழந்த கார், நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. அனைவரும் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற விபத்தில், காரில் பயணம் செய்த பொன் சேகர் காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார். காரில் பயணம் செய்த பிற 5 பேரும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியுள்ளனர். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்ட ரெனிஸ் வாளன் மற்றும் ரஜினி ராஜா ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பலியாகினர். அதிஷ்டபாலன், செல்வம், ஸ்டீபன் ஆகிய 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக திசையன்விளை காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Thisayanvilai Friends Car Accident 3 Died 19 July 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->