கர்ப்பிணி பெண் உட்பட 5 பேர் பரிதாப பலி... அதிவேகத்தால் அரங்கேறிய சோகம்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளை மணப்படைவீடு மற்றும் மனக்காடு பகுதியை சார்ந்த பெண்கள், அங்குள்ள சுற்றுவட்டார கிராமங்களுக்கு வயல் வேலைகளுக்கு சென்று வருவது வழக்கமானதாகும். இன்று அதிகாலை அப்பகுதியை சார்ந்த 33 பெண்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணியாச்சி பகுதியில் உள்ள வயல்களில் பணிகளுக்காக சரக்கு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 

இந்த வாகனத்தை மனக்காடு பகுதியை சார்ந்த சித்திரை என்ற 55 வயது நபர் ஓட்டி சென்றுள்ளார். இந்த வாகனம் மணியாச்சி காவல் நிலையம் அருகேயுள்ள பாலத்தில் செல்கையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த வாகனம் சாலையோர நீர் செல்லும் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று அனைவரையும் மீட்ட நிலையில், காவல் துறையினரும் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அவசர ஊர்தி மூலமாக காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், விபத்தில் கர்ப்பிணி பெண்மணி உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். கர்ப்பிணி பெண்மணியும் பலியானதால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டது. 

மேலும், வளைவான பகுதியில் அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியதே விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதால், காயமின்றி தப்பிய ஓட்டுநர் சித்திரையை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Tempo Traveler Van Accident Police Investigation 16 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->