சீவலப்பேரி சுடலை மாடசாமி கோவில் பூசாரி கொலை.. காவல்துறை விசாரணை.! - Seithipunal
Seithipunal


சீவலப்பேரி பகுதியில் கோவில் பூசாரி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரி பகுதியை சார்ந்தவர் சிதம்பரம் (வயது 45). இவர் அங்குள்ள ஸ்ரீ சுடலைமாடசுவாமி கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். இவரும், அப்பகுதியை சார்ந்த நடராஜ பெருமாள் (வயது 53) என்பவரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். 

இருவரும் நேற்று மாலை வீட்டருகே நின்று பேசிக்கொண்டு இருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதத்துடன் வந்த மர்ம நபர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். 

பலத்த காயமடைந்த சிதம்பரம் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, நடராஜ பெருமாள் பலத்த காயத்துடன் பாதிக்கப்பட்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நடராஜ பெருமாளை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சிதம்பரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையில் ஸ்ரீ சுடலைமாடசுவாமி கோவில் திருவிழாவின் போது, கடை அமைப்பது தொடர்பாக இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கொலை நடந்துள்ளதாக தெரியவருகிறது என காவல் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Seevalaperi Sri Sudalai Madasamy Temple Poosari Chidambaram Murder 19 APril 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->