#Breaking: சபாநாயகர் எம்.அப்பாவு தொகுதியில், கல்குவாரி வெடி அழுத்தத்தால் வீடு இடிந்து 3 வயது சிறுவன் பலி.!! - Seithipunal
Seithipunal


கல்குவாரியில் வைக்கப்பட்ட வெடியின் அழுத்தத்தால் வீட்டின் சுவர் இடிந்து, 3 வயது சிறுவன் பரிதாபமாக பலியாகிய சோகம் நடந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இராதாபுரம் அருகேயிருக்கும் கிராமம் சீலாத்திக்குளம். இந்த கிராமத்தை சார்ந்தவர் முருகன். இவரது மனைவி சுகன்யா. முருகன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய ஆகாஷ் என்ற மகன் இருக்கிறார். 

இராதாபுரம் சுற்றுவட்டார பகுதியில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அங்குள்ள ஒரு கல்குவாரியில் பாறையை உடைக்க வெடிவைத்து பாறைகள் தகர்க்கப்பட்ட நிலையில், வெடியின் வீரியம் காரணமாக சீலாத்திகுளத்தில் உள்ள வீடுகள் அதிர்ந்துள்ளது. 

மேலும், 10 க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்கள் சேதமடைந்த நிலையில், முருகனின் வீட்டு சுவரும் சேதமாகியுள்ளது. வீட்டின் உள்ளே முருகனின் மகன் ஆகாஷ் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், சுகன்யா அருகே தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார்.

வெடி அழுத்தத்தால் அதிர்ந்த சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த முருகன் - சுகன்யா தம்பதியின் மகன் ஆகாஷ் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்து இருக்கிறான். இந்த விஷயம் முருகனுக்கு தெரிவிக்கப்பட்டு, ஊர் மக்கள் திரண்டு வந்து சிறுவனின் உடலை மீட்டுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த இராதாபுரம் காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சிறுவனின் மரணம் சீலாத்திக்குளம் கிராம மக்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சிறுவனின் உடலை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மடியில் கிடத்தி கதறி அழுதது காண்போரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது.

இதுதொடர்பாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கையில், " இராதாபுரம் சுற்றுவட்டார பகுதியில் 20 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது எனவும், குவாரிகளின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், போராட்டம் நடத்தியும் பலனில்லை. இன்று ஒரு உயிர் பறிபோய்விட்டது " என ஆதங்கம் தெரிவிக்கின்றனர். 

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் எம். அப்பாவு இராதாபுரம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Radhapuram Seelathikulam Village Quarry Bomb Blast Building Damaged Child Died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->