ரவுடிகளின் கூடாரமாக திருநெல்வேலி?.. என்ன செய்கிறது காவல்துறை?.. வெளியான பரபரப்பு தகவல்கள்.!!
Tirunelveli Police want to take action immediately to Rowdy gang
திருநெல்வேலியில் உள்ள ரெட்டியார்பட்டிமலை அருகேயுள்ள சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக மாலை நேரத்தில் காதல் ஜோடியொன்று பேசிக்கொண்டு இருக்கவே, 4 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தில் வந்து, கத்தி முனையில் காதல் ஜோடிகளை மிரட்டியுள்ளனர். மேலும், காதல் ஜோடியிடம் இருந்து அலைபேசி மற்றும் ரூ.500 பெற்ற கும்பல், ஏ.டி.எம் கார்டுகளை வாங்கி ரூ.ஆயிரத்தையும் எடுத்துள்ளது.
இதன்பின்னர், காதல் ஜோடியை வீடியோ எடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தால் விடியோவை இணையத்தில் பதிவு செய்வோம் என்று மிரட்டியுள்ளது. சிறிது நேரத்திற்குள்ளாகவே கொள்ளை கும்பல் காதல் ஜோடியின் விடியோவை வாட்ஸப்பில் பரப்பவே, திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் பரவியுள்ளது. இதனையடுத்து விசாரணையில் இறங்கிய காவல் துறையினர், பாதிக்கப்பட்ட இளைஞரான பெரும்பாள்புரம் பகுதியை சார்ந்த வாலிபரை நேரில் சந்தித்தனர்.
கொள்ளையர்களுக்கு பயந்து இருந்த வாலிபரிடம், இலாவக பேசிய காவல்துறையினர் புகாரை பெற்றுள்ளது. பின்னர் மேற்கொண்ட விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்ட கேடுகெட்ட கும்பல் சீவலப்பேரி மருகால்தலை பகுதியை சார்ந்த ரவுடி பூல்பாண்டி, அவனுக்கு ஒத்து ஊதும் அருணாச்சலம், குமார் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், பூல் பாண்டியின் மீது ஏற்கனவே 21 வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த விஷயம் குறித்து தனிப்படை அமைத்து மூவரையும் காவல் துறையினர் கைது செய்த நிலையில், காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு இருந்தனர். இந்நிலையில், காவல் அதிகாரிக்கு அழைப்பு வந்த நிலையில், பூல் பாண்டியை கைது செய்ய கூடாது என்று கூறி பேசப்பட்டுள்ளது. பேசியபடி அருணாசலத்தை சிறையில் அடைத்துவிட்டு, பூல் பாண்டியை வெளியே விட்டுள்ளனர்.
காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பூல்பாண்டி, தனது ஒத்து ஊதுபவர்களுடன் சேர்ந்து கிட்டப்பா என்பவனின் கல்லறைக்கு சென்று சபதம் எடுத்ததாகவும் தெரியவருகிறது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகியிருந்த நிலையில், காவல் துறையினர் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வியை அப்பகுதி மக்கள் முன்வைக்கின்றனர். மேலும், ரவுடிகளை காவல் துறையினர் வளர்த்து விடுவது எதற்கு?. நான்கு பேரை தங்களின் பாணியில் பாத்ரூமில் வழுக்கி விழ வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tirunelveli Police want to take action immediately to Rowdy gang