வாட்டர் கேன் பாயின் வம்பு.. பெண்ணின் உறவினர்கள் படையோடு வந்து படையல் போட்ட பரபரப்பு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் வீடியோ கால் பேசி பதிவு செய்து வைத்த காமுகன் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்திய நிலையில், உறவினர்கள் காமுகனை அடித்து நொறுக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியை சேர்ந்தவர் ஜெகன். இவன் வீடு வீடாக தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வந்த நிலையில், இவரை தேடி வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். 

பதறிப்போன ஜெகனின் உறவினர்கள் ஜெகனை காப்பாற்ற வந்த நிலையில், அவரது உறவினர்களுக்கும் பாரபட்சமில்லாமல் அடி விழுந்தது. மேலும், வந்திருந்த நபர் மண்வெட்டியை வைத்து ஜெகனின் உறவினரின் மண்டையில் ஓங்கி அடிக்க, அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்ததால் அங்கு உள்ளவர்கள் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகினர். 

இதன்பின்னர், ஜெகன் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்த நிலையில், அவரையும் பிடித்து அடித்து நொறுக்கிய பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணையில், இதே ஊரைச் சேர்ந்த சதீஷ் என்பவர் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், அவரது மனைவி வீட்டில் தனியாக இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட ஜெகன், சதீஸின் மனைவி அலைபேசி எண்ணை வாங்கியுள்ளார். 

பின்னர் அவரிடம் வேண்டுமென்றே வீடியோ கால் பேசி, காதல் மொழிகள் மூலம் கவர முயற்சித்த நிலையில், முதலில் நல்லவன் போல நடித்து அந்தரங்க தகவல்களை பெற்றுள்ளான். இதனை வீடியோவாக பதிவு செய்து வைத்து கொண்டு பின்னர், தனது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டியுள்ளான். 

இந்நிலையில், ஊருக்கு திரும்பி வந்த கணவரிடம் அந்தப் பெண்மணி இதுதொடர்பான தகவலை தெரிவிக்கவே, அவரது கணவர் மற்றும் பெண்ணின் குடும்பத்தார் என்று அனைவரும் ஜெகனின் வீட்டிற்கு வந்து அவரை அடித்து நொறுக்கியுள்ளனர். 

இந்த விஷயம் காவல் நிலையத்திற்கு சென்று உள்ளதால், ஜெகனின் செல்போன் பதிவுகள் அனைத்தும் காவல்துறையினரிடம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களுக்கு திடீரென அறிமுகமாகும் நபர்களிடம் நண்பன் என்ற முறையிலும் அந்தரங்க விஷயங்களைப் பேசினால் என்ன மாதிரியான விபரீதம் நடக்கும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும். 

மேலும், இதுபோன்ற சிக்கல்கள் ஏற்பட்டால் வீட்டில் உள்ளவர்களிடம் அல்லது காவல் நிலையத்தில் புகார் அளித்து காமுகர்களை அம்பலப்படுத்துவது சாலச்சிறந்தது. மாறாக எதிராளியின் மிரட்டலுக்கு பயந்தால் என்ன மாதிரியான விபரீதம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Panakudi woman Sexual Torture by Water Cane Distributer Woman Relations Attack 28 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->