பணகுடி காவல்நிலைய அதிகாரி மீது, போக்ஸோ வழக்குப்பதிவு.. சிறுமியின் தாய் கொடுத்த புகாரில் நடவடிக்கை.!
Tirunelveli Panakudi Police Station Officer Arul Johnson Against Complaint Pocso Act 30 Sep 2021
பணகுடி காவல் அதிகாரி மீது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி காவல் நிலையத்தில், காவல் அதிகாரியாக பணியாற்றி வருபவன் அருள் ஜாக்சன். இவரின் மீது செல்வி என்ற பெண்மணி, காவல் அதிகாரி அருள் ஜாக்சன் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்.
செல்வி வள்ளியூரில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், காவலர் அருண் ஜாக்சன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து காவலரிடம் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், விசாரணையின் முடிவில் அவரின் மீதான குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன என அதிகாரிகள் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tirunelveli Panakudi Police Station Officer Arul Johnson Against Complaint Pocso Act 30 Sep 2021