கள்ளஉறவுக்கு சிறுவன் தடை.. கள்ளக்காதலனின் கொடூரம்.. வேடிக்கை பார்த்த தாய்.! - Seithipunal
Seithipunal


தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக ஐந்து வயது மகனை, கள்ளக்காதலன் தீயினால் துன்புறுத்திய போதும் அருகில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தாயின் கொடூரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி சண்முகநாதன்புரம் பகுதியை சேர்ந்தவர் பெனட் மேரி. இவருக்கும், களக்காடு பகுதியைச் சார்ந்த சாலிட் ராஜா என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இருவருக்கும் 9 வயதில் மகளும், ஐந்து வயதில் மகனும் உள்ள நிலையில், ராஜா வனப்பகுதியில் உள்ள தோட்டங்களில் நெல்லிக்காய் பறிப்பதற்காக சென்றுவிடுவார். இதனால் 20 நாட்கள் அங்கு தங்கியிருந்து, பின்னர் மாதம் ஒரு முறை அல்லது இரு முறை வீட்டிற்கு வரும் நிலையில், மேரி தையல் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், இவருக்கும் நாங்குநேரி காத்துநடப்பை பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறவே, வெள்ளைச்சாமியுடன் சேர்ந்து தனது ஐந்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு, பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

இதன்போது, இவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு சிறுவன் தடையாக இருப்பதாக கருதிய வெள்ளைச்சாமி, சிறுவன் மீது கோபம் கொண்டு சிறுவனின் முகம், வயிறு, தொடைப் பகுதி என உடல் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளான். இதனால் சிறுவனின் முகம், நெஞ்சுப் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து சாலிட் ராஜாவின் உறவினர்கள் திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் வெள்ளைச்சாமி மற்றும் அவரது கள்ளக்காதலி மேரியை விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Panakudi Child Torture by his Affair Woman Son Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->