பழிக்கு பழி.. இரண்டு குடும்பத்தையே கொன்று குவித்த முன்விரோதம்.. நாங்குநேரியில் பேரதிர்ச்சி.!
Tirunelveli Nanguneri Murder due to Murder Revenge Police Investigation
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி மறுகால்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகன் நம்பிராஜன். இவர் அதே ஊரைச் சார்ந்த தங்கபாண்டியன் என்பவரின் மகளான வான்மதி என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும், காதல் திருமணம் என்பதால் இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது.
இதனால் நாளுக்கு நாள் முன்விரோதமும் அதிகரித்த நிலையில், தம்பதிகள் இருவரும் திருநெல்வேலி நகர பகுதியில் வசித்து வந்தனர். இதில், நம்பிராஜன் கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ஆம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வான்மதியின் சகோதரர் செல்லச்சாமி மற்றும் உறவினர்கள் செல்லத்துரை, முருகனை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் பழிக்குப்பழியாக இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் நம்பிராஜன் கொலை வழக்கில் தொடர்புடைய செல்லசாமியின் தந்தையான ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக நம்பிராஜனின் அண்ணன் ராமையா, தாய் சண்முகதாய், உறவினர் சங்கர் மற்றும் இசக்கி ஆகியோர் கைது செய்யப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகியுள்ளனர்.
இந்நிலையில், சங்கர் மற்றும் இசக்கி தங்களின் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில், சண்முகத்தாய் மற்றும் அவரின் கணவர் அருணாச்சலம் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அந்த நேரத்தில், அருணாசலம் வீட்டிற்கு அருகே வசித்து வந்த சாந்தியின் இல்லத்திற்குள் நுழைந்த மர்ம கும்பல், வெடிகுண்டு வீசி சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. பின்னர் சண்முகத்தாய், அருணாச்சலம் வீட்டிற்குள் புகுந்த நிலையில், அருணாச்சலம் தப்பி சென்றுள்ளார்.
கையில் சிக்கிய சண்முகத்தாயை மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு நாங்குநேரி சுங்கச் சாவடியில் உள்ள கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக இப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்த 3 வயது பச்சிளம் குழந்தை படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tirunelveli Nanguneri Murder due to Murder Revenge Police Investigation