குடிபோதையில் சண்டையிட்டு கொலைகேசில் சிக்கிய நட்பூ..! - Seithipunal
Seithipunal


குடிபோதையில் சண்டையிட்ட நண்பர், தனது சக நண்பரை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி முனைஞ்சிப்பட்டி சந்தை பகுதியை சார்ந்தவர் ராமர் (வயது 36). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சார்ந்த உறவினர் சுடலை (வயது 41). இவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக கட்டிட வேலைக்கு சென்று வரும் நிலையில், இருவரும் ஒன்றாக மது அருந்துவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு அப்பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவில் அருகே கிணற்று பகுதியில் அமர்ந்து இருவரும் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்த நிலையில், அங்கு வந்த பிற நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். 

இதன்போது, ராமருக்கும் - சுடலைக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த நண்பர்கள் இருவரையும் சமாதானம் செய்த நிலையில், ஆத்திரம் தீராத சுடலை ராமரை கொலை செய்யும் திட்டத்தோடு கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். 

இதில், கிணற்றின் பக்கவாட்டுசுவர் ராமரின் தலையில் மோதி நீரில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியாகினார். கிணற்றில் யாரோ குதிப்பது போல சத்தம் கேட்டதும் விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் எட்டி பார்க்கையில் ராமரின் தலை தெரிந்த நிலையில், அவரது தலையில் அடிபட்டு இரத்தம் வெளியேறி நீருக்குள் மூழ்கினார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மூலகறைபட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் நாங்குநேரி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். பின்னர், சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் அதிகாலை 2 மணியளவில் ராமரின் உடல் மீட்கப்பட்டது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர், ராமரின் மனைவி தங்கம்மாள் (வயது 34) கொடுத்த புகாரின் பேரில் சுடலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Nanguneri Friend Murder by Another one Police Investigation 28 July 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->