#BigBreaking: 2 பெண்கள் வெடிகுண்டு வீசி கொலை.. நாங்குநேரி அருகே பதற்றத்தால், காவல்துறை குவிப்பு.!!
Tirunelveli Nanguneri 2 women Murder Police Investigation and Police Protection Increased
வீட்டில் இருந்த இரண்டு பெண்கள் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் வெடிகுண்டு வீசி இரண்டு பெண்கள் கொடுரக்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. நாங்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சி பகுதியில் வீடு புகுந்து வெடிகுண்டு வீசியதில் இரண்டு பெண்கள் அங்கேயே பலியாகியுள்ளனர்.
வீட்டில் இருந்த சண்முகத்தாய், சாந்தி வெடிகுண்டு வீச்சில் பலியான நிலையில், 3 வயது குழந்தை செல்வி படுகாயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் தெரிவிக்கையில், நாங்குநேரி பகுதியை சார்ந்த நபர் ஒருவரை, நெல்லை இரயில் நிலையத்திற்கு அருகே பல வருடங்களுக்கு முன்னதாக கொலை செய்யப்பட்ட வழக்கில் பழிக்கு பழியாக இக்கொலை சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது " என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tirunelveli Nanguneri 2 women Murder Police Investigation and Police Protection Increased