குடிபோதையில் கஞ்சா குடிக்கிகளுக்குள் தகராறு.. பட்டப்பகலில் மக்களை பதறவைத்த பாவிகள்.. நெல்லையில் அட்டூழியம்.! - Seithipunal
Seithipunal


மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் மூன்று பேர் சேர்ந்து ஒருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த பயங்கரம் அரங்கேறியுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியைச் சார்ந்தவர் மகாராஜன். இவரது நண்பர்கள் மணிகண்டன் உட்பட 3 பேர். இவர்கள் மூவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் மூவரும் திருமண விழாவிற்கு சென்றுள்ளனர். 

அங்கு இவர்களுக்குள் பிரச்சனை ஏற்படவே, இதனால் மகாராஜன் தனது மூன்று நண்பர்களிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இது தொடர்பான முன்விரோத பிரச்சனை இவர்களுக்குள் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஜாவிற்கு போன் செய்து நெல்லை சந்திப்பு பகுதிக்கு வரச்சொல்லி கூறியுள்ளனர். 

நண்பர்கள் அழைத்ததும் விரைந்து சென்ற மஹாராஜனுக்கு பெரும் அதிர்ச்சியாக, அவரின் கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில், அதிஷ்டவசமாக லேசான காயத்துடன் மகாராஜன் உயிர் தப்பவே, இந்த சிசிடிவி காமிரா காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மஹாராஜனின் நண்பர்கள் மூவரும் கஞ்சா விற்பனையாளர்கள் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் ரவுடியிசம் தலைதூக்கியுள்ள நிலையில், இதனைப்போன்ற குற்றங்கள் மேலும் நடந்து அப்பாவி மக்கள் பாதிக்காமல் இருக்கும் வகையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Murder Attempt CCTV Footages Release Police Investigation 20 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->