ஆயுள் கெட்டி... நூலிழையில் உயிர் தப்பிய முதியவர்.. அதிவேகத்தில் வந்த சரக்கு வாகனம்..! - Seithipunal
Seithipunal


சாலையில் நடந்து சென்ற முதியவர் விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய பரபரப்பு சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் தெற்கு வீதி பகுதியில், முதியவர் ஒருவர் சாலையோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். இதன்போது, அவருக்கு பின்னால் அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் அதிவேகத்தில் வந்துள்ளது. 

அதிவேகத்தில் வந்த சரக்கு வாகனம் சாலையில் தனது கட்டுப்பாட்டை இழக்கவே, சாலையோரத்திற்கு வந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி சேதப்படுத்தி இருக்கிறது. அதே வேகத்தில் சாலையில் ஓரமாக பயணம் செய்துகொண்டு இருந்த முதியவரின் மீது மோதுவது போல சென்றுள்ளது. 

வாகனத்தின் அதிவேகமோ, முதியவரின் நல்லநேரமோ என்று தெரியவில்லை, வாகனம் வந்த வேகத்தில் முதியவரின் கைகளை உரசியவாறு சென்று விபத்திற்குள்ளானது. இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள், அங்குள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருக்கிறது. 

மேலும், இப்பகுதி வளைவான பகுதி என்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இதனை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Manur Accident Aged Man Luckily Escaped CCTV Footage Leaked Out


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->