கூடங்குளம் 5, 6 ஆவது அணு உலை பணிகள் இன்று தொடக்கம்.!
Tirunelveli Koodankulam Atomic Power Station 5 and 6 Plant Works Starting Today 29 June 2021
கூடங்குளத்தில் அணு உலை கட்டுமான பணியானது தொடங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் நான்கு அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில், ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்க உள்ளது.
இந்திய அணுசக்தி துறையின் செயலாளர் கே.என் வியாஸ் மும்பையில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக இதனை தொடங்கி வைக்கிறார். கூடங்குளத்தில் உள்ள ஐந்து மற்றும் ஆறாவது அணு உலையின் முதற்கட்ட பணிகள் கடந்த 2018 ஆம் வருடம் பூமி பூஜையுடன் தொடங்கி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய - ரஷிய கூட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் ஏற்படுத்தப்பட்டு, மின்சார உற்பத்தி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tirunelveli Koodankulam Atomic Power Station 5 and 6 Plant Works Starting Today 29 June 2021