ஊழல் முறைகேடு உறுதியானால் சோசியல் மீடியாவில் கிழிதான்.. போனசாக புகார்.. இளைஞர்கள் எச்சரிக்கை.!
Tirunelveli Kallikulam Youngster Warning about Village Administration Bribery Issue After Victory Election Getting Post
ஊழல் செய்தது உறுதி செய்யப்பட்டால் இலஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்துவிட்டு, புகைப்படம் மற்றும் பொறுப்பு விபரங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என இளைஞர்கள் வித்தியாசமான முறையில் எச்சரிக்கை செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவுபெற்றுள்ளது. அங்குள்ள நாங்குநேரி, களக்காடு, வள்ளியூர், இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அக். 9 ஆம் தேதி இரண்டாம்கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் நடைபெறவுள்ள பகுதியில் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், ஊழல் செய்யலாம் என கனவுகள் காண வேண்டாம் என்று இளைஞர்கள் சார்பில் சுவரொட்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளிகுளம் பஞ்சாயத்து இளைஞரணி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள சுவரொட்டிகளில், ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கான எச்சரிக்கையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியில், "பணம் கொடுத்து வெற்றி என்ற எண்ணத்தில் இருக்கும் வேட்பாளர்கள், தேர்தல் செலவு பணத்தை வெற்றிக்கு பின்னர் ஊராட்சி நிதியில் இருந்து எடுக்கலாம் என பகல் கனவு காண வேண்டாம்.
கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் போது இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மூலமாக வரவு செலவு கணக்குகள் குறித்த விபரம் கேட்கப்படும். இவை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆவணத்தால் சரி பார்க்கப்படும். ஊழல் நடைபெற்றது கண்டறியப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படம் மற்றும் பொறுப்பு போன்ற விபரங்கள் இணையத்தில் பதிவு செய்யப்படும். மாநில இலஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்யப்படும் " என்று தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tirunelveli Kallikulam Youngster Warning about Village Administration Bribery Issue After Victory Election Getting Post