கத்திமுனையில் சிறுமி பாலியல் பலாத்காரம்.. நெல்லையில் பயங்கரம்.!!
Tirunelveli girl sexual abuse police arrest culprit
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமுகனை மானுர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானூர் பகுதியில் சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இதே பகுதியில், பாலமுருகன் என்ற 27 வயது காமுகன் வசித்து வருகிறான். இந்நிலையில், சிறுமியரை காமுகன் பாலமுருகன் சம்பவத்தன்று கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், இது குறித்து யாரிடமும் கூறும் பட்சத்தில், குடும்பத்துடன் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். இதனால் பயந்துபோன சிறுமி, இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து காமுகன் பாலமுருகனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tirunelveli girl sexual abuse police arrest culprit