அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்..! திமுகவின் காண்டாட்டம்.. வெறும் பெட்டிப்பு..! - Seithipunal
Seithipunal


நமது ஊர்களில் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று இருட்டில் செல்ல பயம் கொள்பவர்களுக்கும், சில முக்கிய விஷயத்திற்கும் மேற்கோள் காண்பித்து பழமொழியை கூறுவார்கள். தற்போது திமுகவினர் கன்டைனரை கண்டாலே பழமொழி போல ஆவேசமடைந்து விடுவதாக காவல்துறை தரப்பில் புலம்பல் முன்வைக்கப்படுகிறது. 

தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் கொடிக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டிருக்கிறது. 

இந்த கல்லூரி அருகே உள்ள தனியார் நிலத்தில் கட்டிடம் கட்டும் பணிக்காக, கண்டைனர் ஒன்று கொண்டு வரப்பட்ட நிலையில், அந்த நிலத்தில் வைக்கப்பட்டது. இந்த கண்டைனரை கண்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அங்கு திரண்டுள்ளனர். 

உடனடியாக அங்கு வைக்கப்பட்டிருந்த கண்டைனரை அப்புறப்படுத்தக் கோரி முற்றுகைப் போராட்டம் செய்த நிலையில், வாக்குப்பெட்டி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் செந்தில்நாதன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இந்த கண்டைனர் இருந்துள்ளது. 

கட்டிட வேலைக்கு பயன்படுத்துவதற்காக இது கொண்டு வரப்பட்ட நிலையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து திமுக கட்சியினர் முன்னிலையில் திறந்து பார்த்துள்ளனர். இதன்போது, கண்டைனரில் எதுவுமே இல்லாமல் இருந்துள்ளது. எனினும், கண்டைனர் அங்கு இருக்கக் கூடாது என்று அவர்கள் அடம் பிடிக்கவே, அந்த இடத்திலிருந்து கண்டைனர் அப்புறப்படுத்தப்பட்டது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli DMK Supporters Make Atrocity Empty Construction Container 18 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->