கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு கூலித்தொழிலாளி மரணம்.. நெல்லையில் சோகம்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி டவுன் கூழக்கடை பஜார் பகுதியை சார்ந்தவர் முத்து கிருஷ்ணன் (வயது 45). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, மருத்துவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள அறிவுறுத்திய நிலையில், கடந்த 8 ஆம் தேதி முத்துகிருஷ்ணனுக்கு முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக முத்து கிருஷ்ணனின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Corona injected Person Mystery Death 15 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->