#JustIN: காலாவதியான குளிர்பானம் குடித்த சிறுமி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.!
Tirunelveli Child Girl Admit Hospital critical Stage Drunk Expired Cool Drinks
குளிர்பானம் குடித்த சிறுமி மயங்கி விழுந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
தமிழகத்தில் காலாவதியான குளிர்பானம், உணவுப்பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது ஏற்படும் உயிர்பலிகளால் அவை அம்பலமாகிறது. மேலும், உயிர்கள் பறிபோன அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களை சீல் வைத்து வருகின்றனர். சில இடங்களில் அதிரடி சோதனையும் நடந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழவூர் அருகேயுள்ளது ஆவரைக்குளம் கிராமம். இந்த கிராமத்தின் சிவஞானபுரம் பகுதியை சார்ந்தவர் இந்துஜா (வயது 14). இந்த சிறுமி அவ்வப்போது குளிர்பானங்களை வாங்கி குடிப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்றும் வீட்டிற்கு அருகேயுள்ள கடையில் சிறுமி இந்துஜா வழக்கம்போல குளிர்பானம் வாங்கி குடிக்கவே, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர்.
சிறுமி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், சிறுமி குடித்த மாம்பழ குளிர்பானம் காலாவதியாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை நடத்த விரைந்திருப்பதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே காலாவதியான குளிர்பானத்தை குடித்து இளம் குழந்தைகள், சிறார்கள் உயிரை பறிகொடுத்த துயரம் நடந்து வரும் நிலையில், சிறுமியொருவர் உயிருக்கு போராடி வரும் சோகம் நடந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tirunelveli Child Girl Admit Hospital critical Stage Drunk Expired Cool Drinks