சிறுவர்களின் சண்டையை விலக்கிவிட சென்ற முதியவர் பலி.. நெல்லையில் சோகம்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளபாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சித்திக். இவரது மகன் இர்பான். இவர் அரசு பள்ளியில் பயின்று வரும் நிலையில், இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இர்பானிற்கும் - சிறுவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்படவே, ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி உள்ளது. இதனை பார்த்த இப்ரானின் தாத்தா சர்புதீன் மற்றும் சிறுவனின் சித்தப்பா சையது அலி விரைந்து சென்று சண்டையை விலக்கி விட்டுள்ளனர். 

இதன்போது, சிறுவர்கள் எதிர்பாராதவிதமாக சர்புதீனை தள்ளவே, கீழே விழுந்து முதியவர் மயக்கம் அடைந்துள்ளார். இதனால் பதறிப்போன உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கவே, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மூன்று சிறுவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Aged Man death Sent off Clear Children Fight Ends


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->