ஆற்றங்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு.. மதுரையில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் 60 வயதுடைய பெண்மணியின் எரிந்த சடலமானது மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் ஈ.பி ராஜன் தெரு பகுதியில் குண்டாறு இருக்கிறது. இந்த பகுதியில் இன்று மதியம் துர்நாற்றம் கலந்த புகை குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த மக்கள் அப்பகுதிக்குச் சென்று பார்த்துள்ளனர். 

அங்கு ஒரு பெண்மணியின் உடல் கிடப்பதையும், அது தீப்பற்றி எரிவதையும் கண்டறிந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இது தொடர்பாக திருமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தீயை அணைத்து பெண்மணியின் உடலை ஆய்வு செய்தனர். அதில் அந்த பெண்மணிக்கு பதினெட்டு வயது இருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில், பெண்மணியின் உடல் 70 விழுக்காடு எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

பெண்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்ததை தொடர்ந்து, பிரேத பரிசோதனையின் முடிவில் பெண்மணியின் வயது 60 இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், பெண்மணி யார்? எதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார்? என்று விசாரித்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirumangalam girl murder case police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->