நாட்டு வெடிகுண்டை தின்பண்டமாக பாவித்த சிறுவன்.. தலை சிதறி பலியான பரிதாபம்.!!
Tiruchirappalli child died ate country bomb like snacks
திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் அழகரை கிராமத்தைச் சார்ந்தவர் கங்காதரன். இவர் அங்குள்ள பாப்பாபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் குவாரியில், செல்வகுமார் என்பவரிடம் பாறையை உடைக்க பயன்படுத்தும் மூன்று நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வைத்துள்ளார்.
இந்த நாட்டு வெடிகுண்டுகளை வைத்து மணல்மேடு பகுதியில் இருக்கும் காவிரி ஆற்றங்கரையில், கங்காதரன் மீன் பிடித்துள்ளார். மேலும், கங்காதரன் நாட்டு வெடிகுண்டுகளை தண்ணீருக்குள் வீச, தமிழரசன் மற்றும் மோகன் ராஜ் ஆகியோர் ஆற்றில் வெடிகுண்டு வீச்சில் செத்து மிதக்கும் மீன்கள் சேகரித்து வந்துள்ளனர்.
இதில் இரண்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டு நிலையில், தேவையான அளவிற்கு மீன்கள் கிடைத்துள்ளது. இதன்பின்னர், கங்காதரனின் உறவினரான பூபதி என்பவரின் வீட்டிற்கு மீன்களுடன் மூவரும் வந்துள்ளார்.
அந்த சமயத்தில், பயன்படுத்தப்படாத ஒரு வெடிகுண்டை கட்டிலில் வைத்து விட்டு, மீனை சமைப்பதற்கு கழுவி சுத்தம் செய்ய வீட்டின் பின்புறத்திற்கு சென்றுள்ளனர். கட்டிலின் மீது வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டை, சாப்பிடும் பொருள் என்று நினைத்த பூபதியின் ஆறு வயது மகன் விஷ்ணு தேவ், வெடிகுண்டை கடித்துள்ளான்.
இதில், பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிகுண்டுக்கு சிறுவன் தலை சிதறி பரிதாபமாக பலியாகியுள்ளான். வெடிச்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் கங்காதரன், பூபதி உட்பட நால்வரும் விரைந்து வந்த நிலையில், விபரீதம் புரிந்ததுள்ளது.
இந்த விஷயம் வெளியே தெரிந்தால், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சிறை செல்லவேண்டியிருக்கும் என்று எண்ணிய நபர்கள், இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று ரகசியமாக தகனமும் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்த நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொண்டு, வெடிகுண்டை வாங்கி வந்த கங்காதரன், மோகன்ராஜ், வெடிகுண்டு விற்பனை செய்த செல்வகுமார் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிலரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruchirappalli child died ate country bomb like snacks