தேனி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இளைஞர் பலி.!
Tipper lorry motorcycle accident in theni
தேனி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன்(24). இவர் அர்ச்சனா என்பவருடன் போடி மெட்டு காத்தாடி பாறை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளிலிருந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தாமரைக்கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த அர்ச்சனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த தாமரை கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Tipper lorry motorcycle accident in theni