மிளகாய்ப்பொடி வீசி, நகை வியாபாரியிடம் கொள்ளை... திண்டிவனத்தில் பகீர்.!!
Tindivanam Diamond Jewel Robbery Police Investigation
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியை சார்ந்தவர் கருணாநிதி. இவர் வைர நகை வியாபாரியாக இருந்து வருகிறார். இவர் அங்குள்ள கடைகளுக்கு தேவையான நகைகளை எடுத்து சென்று வழங்கும் நபராகவும் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று ரூ.3 கோடி மதிப்புள்ள 52 கேரட் வைர நகைகளை எடுத்து சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம கும்பலொன்று, இவரை இடைமறித்து மிளகாய்ப்பொடியை தூவி வைர நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக கருணாநிதி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tindivanam Diamond Jewel Robbery Police Investigation