திண்டிவனம் அருகே சோகம்: திருமண நிகழ்ச்சிக்கு சென்று வருகையில், குடும்பத்தினர் 4 பேர் மரணம்.! - Seithipunal
Seithipunal


திண்டிவனம் அருகே நடைபெற்ற விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் உள்ள தளவாய்பட்டியை அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சார்ந்தவர் குருநாதன். இவர் தனது குடும்பத்தாருடன் சென்னையில் உள்ள மேடவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். 

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற உறவினரின் இல்லத்திருமண விழாவிற்கு தனது மனைவி, மகன் மற்றும் சகோதரருடன் காரில் குருநாதன் புறப்பட்டு சென்றுள்ளார். திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பின்னர் சென்னை நோக்கி பயணம் செய்துள்ளனர். 

இவர்களின் கார் திண்டிவனத்தை அடுத்துள்ள பாதிரி கிராமத்தை கடந்து செல்கையில், கார் திடீரென கட்டுப்பாட்டினை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த குருநாதரின் சகோதரர் செந்தில் நாதன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஓலக்கூர் காவல் துறையினர், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tindivanam Accident Family Members 4 Person Death 8 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->