அசால்ட்டு பேபியின் வீடியோவை அலேக்காக தூக்கிய டிக்டாக்.! ஜி.பி.முத்துவின் அதிரடி முடிவால் பதறிப்போன முரட்டு சிங்கிள்கள்..!! - Seithipunal
Seithipunal


அன்றைய காலகட்டங்களில் மனிதர்களுக்கு கேடு விளைவிப்பது அரக்கர்கள் என்ற மனிதர்களாலும் மிருகங்களாலும் இருந்து வந்த நிலையில், தற்போது உள்ள காலகட்டத்தில் இணையம் என்பது பெரிய மந்திரவாதி மற்றும் கொடூரனாக செயல்பட்டு வருகிறது. 

நல்ல செயலுக்கு பயன்படுத்தும் நபர்களுக்கு நண்பர்களாகவும், கொடூர செயல்களுக்கு சீரழியும் செயல்களுக்கு இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதே வழியிலும் இணையம் பெரும் உதவி செய்கிறது. 

அந்த வகையில், டிக்டாக் செயலி எந்தவிதமான பிரச்சனையை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மலேசியாவில் இருந்து தனது நடிப்பு திறமையை காட்டுவதற்காக அரைகுறை ஆடையுடன் ரவுடிபேபி சூர்யா என்கிற பெண்மணி டிக்டாக்கில் மிக பிரபலமாக இருக்கிறார். 

tic tok, tic tok images,

இவர் காதல் பாட்டு., குத்து பாட்டு மற்றும் சோக பாட்டு என டிக்டாக்கில் காட்டாத நவரசங்கள் கிடையாது என்பதற்கு சாட்சியாக பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். மேலும், இவரது வீடியோக்களுக்கு தொடர்ந்து லைக்குகள் அதிகமாகவே, இவர் உடுத்தும் ஆடைகள் கீழே இறங்கி கொண்டே போவதுதான் என்று இருந்துள்ளது. 

இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகள் உள்ள நிலையில், இவரது செயலை பார்த்து பதறிப்போன கணவர் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவரை கலாய்ப்பது போலவே துவக்கத்தில் அறிமுகமான கோமாளி ஜிபி.முத்து இவரிடம் நெருக்கமாகவும் பழகி உள்ளார். 

இவர்கள் இருவரும் சேர்ந்து டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அளவிற்கு பிரபலமான நிலையில்.,  சூர்யா தன்னை நல்லவர் போல காட்டிக் கொண்டாலும், பல ரோமியோக்களை கைவசத்தில் வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் இதன் மூலமாக பாலியல் தொல்லைகள் அதிகரித்த நிலையில், வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு டிக் டாக் அடிமைகளை அதிர வைத்துள்ளார். 

இதுகுறித்து வீடியோவில், டிக்டாக்கில் தனது கணவரை பிரிந்து முதல் கோடம்பாக்கத்தில் நண்பர்கள் செய்யும் தந்திரங்கள் வரை அனைத்தையும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை பார்த்த அவருக்கு உதவி செய்வதாக அறிவுரை கூறிய நபர்களிடம்., ரூ.5 இலட்சம் கடனை அடைக்க கொடுத்துவிட்டு ஆறுதல் கூறுமாறு கூறியிருந்தார்.

இந்த நிலையில்,சூர்யாவின் இந்த கதறல் விடியோவுக்கு பின்னாடி மதுரையை சேர்ந்த மதிவண்ணன் இருப்பது தெரியவந்தது. மேலும், தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக வீடியோ பதிவிட்டது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து, பாலியல் புகார் மூலம் டிக்டாக்கிற்கு புதிய தலைவலியை உருவாக்கிய ரவுடி பேபியின் டிக்டாக்  கணக்கை முடக்க முடிவு செய்தது டிக்டாக் நிர்வாகம். மேலும் சூர்யா, அரை டவுசருடன் ஆட்டம் போட்ட வீடியோவில் இருந்து சேலையில் வீடு கட்டிய வீடியோ வரை அனைத்து வீடியோக்களையும் துடைத்து எறிந்து நீக்கி இருக்கிறது நிர்வாகம். 

ஏறத்தாழ 5,50,000 பின் தொடர்பாளர்களை கொண்ட அந்த டிக்டாக் கணக்கும் பயன்படுத்த முடியாதவாறு முடக்கி இருப்பதாக வேதனை தெரிவித்தார் ரவுடி பேபி சூர்யா. மேலும், ஜி.பி. முத்து சூர்யாவை திருமணம் செய்வேன் என்று பகிரங்கமாக அறிவித்ததும் ரவுடி பேபியை பின்தொடரும் முரட்டு சிங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

எப்போதும் சற்று அதிகமாகவே சவடால் பேசும் சூர்யாவுக்கு, டிக்டாக்கின் இந்த அதிரடி நடவடிக்கை அதிர்ச்சி அளித்திருக்கிறது. இந்த நிலையில், அவரை போலவே சர்ச்சைக்குரிய வீடியோக்களை விதிகளை மீறி பதிவேற்றம் செய்த மதிவாணன் போன்றார், பலரது வீடியோக்களும் நீக்கப்பட்டுதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tik tok surya account blocked video deleted


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->